பிக் பாஸ் இரண்டாம் பாகத்தில் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு இறுதிவரை சென்றவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ்க்கு பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா என்ற கொடிய நோயின் தாக்கத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கிறார்கள்.
தற்போது இந்த ஊர் அடங்கை ஒருசில மக்கள் தங்களுக்கு சாதகமாக சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்கள்.
குறிப்பாக, சிலர் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை படிக்கிறார்கள். ஒரு சிலர் தங்கள் உடல்களை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்து தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள்.
இதேபோல யாஷிகா ஆனந்த் இந்த ஊர் அடங்களில் கடுமையான உடற்பயிற்சி செய்து தனது உடலை குறைத்துள்ளார்.
தற்போது மூன்று மாதத்திற்கு முன் தான் இருந்த புகைப்படத்தையும் தற்போது தான் இருக்கும் புகைப்படத்தையும் ஒப்பிட்டு நான் உடல் எடையை குறைத்துள்ளேன் என்று புகைப்படத்துடன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் நீங்கள் உடல் எடையைக் குறைத்தது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது என்று கமெண்டில் பதிவு செய்து வருகிறார்கள்.