விஜய் படத்தால் கொரோனா அதிகரிக்கும் அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் மாஸ்டர்.
படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் மற்றும் ஆண்ட்ரியா என இரு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாந்தனு நடிக்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.
கொரோனாவால் பாதிப்பு
ஆனால் உலகம் முழுவதும் குரோனோ என்ற நோயின் பிடியில் சிக்கி இருப்பதால் தற்போது மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வு வெளியாகுமா மாஸ்டர்
இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டுள்ளதால் படத்தை எப்படியும் ஜூலை மாதத்தில் வெளியிடலாம் என்று படக்குழு முயற்சி செய்து வரும் நிலையில், மாஸ்டர் படம் குறைந்தபட்சம் டிசம்பர் வரை வெளியாக வேண்டாமென்று அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி மீது கோபத்தில் விஜய் ரசிகர்கள்
தற்போது இந்த செய்தியை கேட்ட தளபதி விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன், ஆத்திரத்திலும் இருக்கிறார்கள்.
ஏற்கனவே தளபதி விஜய் ஆளும் கட்சியின் மீது பல குற்றச்சாட்டுகளை கூறிய நிலையில், வேண்டுமென்றே தளபதி விஜயை பழிவாங்க தற்போது, அதிமுக அரசு செயல்படுவது போன்று தெரிகிறது என்று தளபதி ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.