கே.ஜி.எப் படத்தை பற்றிய புதிய தகவல்!
2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் K.G.F முதல் பாகம் மூன்று மொழிகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகியது.
அம்மா, மகன் சென்டிமென்ட் கொண்ட இத்திரைப்படம் அவ்வாண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டி சுமார் 250 கோடி வசூல் செய்து வசூலில் ஒரு புதிய சாதனையைப் படைத்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தை பற்றிய ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் சுமார் 75% முடிவடைந்து உள்ளதாம். மேலும் இரண்டு சண்டைக் காட்சிகள் உட்பட 25% சதவீத படப்பிடிப்புகள் மீதம் உள்ளதாம்.
அதில் ஒரு சண்டைக் காட்சி கர்நாடகாவில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளார்கள். இந்த சண்டைக்காட்சியில் தான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சஞ்சய் தத் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திட்டமிட்டபடி படம் அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று தெரிகிறது.
வி.ஜே மகேஸ்வரியின் மயக்க வைக்கும் புகைப்படங்கள்!
கவர்ச்சி எனக்கு அலர்ஜி : பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சங்கர். படிப்படியாக தனது திறமையை வெளிப்படுத்தி வெள்ளித்திரையில் கால்பதித்தார்.
அவர் நடித்த முதல் திரைப்படமான மேயாதமான் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர்,மாபியா, என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே, பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த Priya Bhavani Shankar. தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் மட்டுமே தான் நடித்து வருவதாகவும் கவர்ச்சியான கதையம்சம் கொண்ட படங்களில் வாய்ப்புகள் வந்தாலும் அதை தவிர்த்து வருவதாகவும் எனக்கு கவர்ச்சி செட்டாகாது என்றும் ஓபனாக பேசியுள்ளார் பிரியா பவானி சங்கர்.
விஜய் மகனின் லட்சியம்!
தென்னிந்திய சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய். இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது.
இதனிடையே, தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால் தற்போது இந்த தகவல் முற்றிலும் தவறானது என்று தற்போது விஜய் வட்டாரத்தில் இருந்து நம்பத்தகுந்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அது என்ன செய்தி என்றால் ஜேசன் சஞ்சய் ஒரு நடிகனாக ஆக ஆசை இல்லை என்றும் ஒரு சிறந்த இயக்குனராக ஆகவே அவருக்கு ஆசை உள்ளதாகவும்.
அதிலும் தமிழ் சினிமாவின் தற்போதைய ஜாம்பவான் இயக்குனர்களான மணிரத்தினம் மற்றும் இயக்குனர் ஷங்கருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் மூலம் தளபதி விஜயின் மகன் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பே இல்லை என்பது உறுதியாக தெரிகிறது.