அஜித்துடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத தருணம் ட்விட்டரில் உருகிய அருண்விஜய்!
கடந்த 2015-ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் குமார், அருண்விஜய் இணைந்து நடித்த படம் என்னை அரிந்தால். படத்தில் அஜித் போலீஸ் ஆபீசராக நடித்திருப்பார். பெண்களை கடத்தி விலைபேசும் ரவுடியாக அருண்விஜய் நடித்திருப்பார்.
இத்திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெறவில்லை என்றாலும் நடிகர் அருண் விஜய்க்கு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. அதன்பின்பே அவருக்கு பல படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது.
இந்நிலையில், அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் என்னை அறிந்தால் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு என்னால் மறக்கமுடியாத புகைப்படம் என்று கூறியுள்ளார்.
Unforgettable!!❤️ #YennaiArindhaal team!! pic.twitter.com/OjWF5rV32B
— ArunVijay (@arunvijayno1) June 7, 2020
இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா!
சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப்போற்று’ என்ற படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதமே திரைக்கு வர இருந்தது. ஊரடங்கு காரணமாக படத்தின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போடப்பட்டது.
இந்நிலையில், சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்கிறார். இதனிடையே சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.
தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்கும் கனிகா!
பைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் கனிகா. அதன் பின்னர் சேரனுடன் ஆட்டோகிராப், அஜித்துடன் வரலாறு, மலையாளத்தில் மம்முட்டியுடன் பழசி ராஜா போன்ற படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.
இதனிடையே விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் கனிகா. இப்படத்தை லாபம் பட இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்கியுள்ளார். சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரித்துள்ள, இப்படத்தில் நடிகர் விவேக், இயக்குனர்கள் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் டப்பிங் பேசியது ஸ்பெஷலான அனுபவம். ஏனெனில் இதில் இலங்கை தமிழ் பேசியுள்ளேன் என கனிகா பதிவிட்டுள்ளார்.
மிளிர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பா.ரஞ்சித்!
தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஷ்வர்யா தத்தா. இதை தொடர்ந்து பிக்பாஸ் 2 போட்டியில் கலந்து கொண்டு இறுதி போட்டியாளர் வரை சென்றார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாக இருக்கும் மிளிர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். இணையத்தில் வெளியான இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.