தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் மகேஷ் பாபு. இவர் கடந்த 9-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
தனது ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் ஏதேனும் ஒரு சிறப்புமிக்க செயலை செய்து வருவார் மகேஷ்பாபு.
அந்த வகையில் தனது பிறந்த நாளான அன்று மகேஷ்பாபு தனது வீட்டில் மரக்கன்று நடும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
மேலும் இதுபோன்று மரக்கன்றுகளை ஜூனியர் NTR மற்றும் தளபதி விஜய் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் வீட்டில் இதே போன்று மரக்கன்று நட வேண்டும் என்று மகேஷ் பாபு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், மகேஷ் பாபுவின் இந்த வேண்டுகோளை ஏற்ற தளபதி விஜய் இன்று தனது வீட்டில் மரக்கன்று நட்டு அதை புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த மரக்கன்று உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று மகேஷ் பாபுவுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார் தளபதி விஜய்.