தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூர்யா. இவர் சமீபத்தில் நடித்து முடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது.
இந்நிலையில், சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடித்து வந்தார். இதனிடையே, கொரோனாவால் நாடு முழுவதும் லாக் டவுன் போடப்பட்டுள்ளதால் ‘அருவா’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக இருந்த ‘வாடி வாசல்’ திரைப்படம் தற்போது தூசி தட்டி கையில் எடுத்துள்ளார் வெற்றிமாறன்.
தற்போது படத்தின் திரைக்கதையை எழுதி முடித்து உள்ளதாகவும் படத்தில் சூர்யா அப்பா மகன் என இரு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்படத்தின் கதை வாடிவாசல் சம்பந்தப்பட்டிருப்பதால் படத்தை பொங்கலுக்கு வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று சூர்யாவிடம் கூறியுள்ளாராம்.
இதைக் கேட்ட சூர்யா அப்ப முதல்ல நம்ம ‘வாடி வாசல்’ படத்தை நடித்து முடித்துவிட்டு அதுக்கப்புறமா அருவா படத்தில் நடிக்க முடிவு பண்ணிட்டாராம். இதற்கு ஹரி சம்மதம் தெரிவித்துள்ளாராம்.