உலகமே இன்று கொரோனா என்ற நோய் பிடியில் சிக்கி உள்ளது. இதனால் பல துறைகள் பாதிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, சினிமா துறையில் மிக முக்கிய துறையாக இருப்பது நடன துறைதான். ஆனால் இதுவரை நடன துறைக்கு என்று யாரும் எந்தவித நிதி உதவி அளிக்க வில்லை.
இந்நிலையில், ராகவா லாரன்ஸ் 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இந்த பணத்தில் ஒவ்வொரு நடன கலைஞருக்கும் 5500 வீதம் வழங்க இருப்பதாகவும் லாரன்ஸ் அவர்கள் அறிவித்துள்ளார். லாரன்ஸின் இந்த அறிவிப்பு நடன கலைஞர்களுக்கு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.