அறம்-2 பாகத்தில் நான் நடிக்கிறேனா : கீர்த்தி சுரேஷ்

அறம் இரண்டாம் பாகத்தில் நான் நடிக்கிறேனா கீர்த்தி சுரேஷ்

அறம் இரண்டாம் பாகத்தில் நான் நடிக்கிறேனா கீர்த்தி சுரேஷ்

keerthy Suresh open up about Aramm 2
keerthy Suresh open up about Aramm 2
keerthy Suresh open up about Aramm 2

கோபி நைனார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அறம். படத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்திருப்பார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று. நயன்தாராவிற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

இதனிடையே, அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளதாக இயக்குனர் கோபி நாயனார் தெரிவித்திருந்தார். மேலும் இப்படத்தில் மீண்டும் நயன்தாரா தான் கதாநாயகியாக நடிப்பாரா என்று கேட்டதற்கு அதை பட தயாரிப்பு நிறுவனம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கோபி நைனார் கூறியிருந்தார்.

Also See | தனுஷ் குரலில் ஜகமே தந்திரம் படத்தின் முதல் பாடல்

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால் இதைப்பற்றி கீர்த்தி சுரேஷிடம் கேட்டபோது என்னிடம் இன்னும் யாரும் இந்த படத்தைப்பற்றி அணுகவில்லை. நிச்சயம் அப்படி அணுகினால் நான் நடிப்பேன் என்று கீர்த்தி சுரேஷ் ஓப்பனாக பேசியுள்ளார்.

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பெண் குயின் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version