உலக நாயகன் கமலஹாசனின் இயக்கத்தில் விஸ்வரூபம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பூஜா குமார். அப்படத்தில் இவரின் நடிப்பை பார்த்த திரையுலகினர் வெகுவாக பாராட்டினர்.
அதைத் தொடர்ந்து விஸ்வரூபம்-2 மற்றும் கமலஹாசன் நடிப்பில் உருவான உத்தம வில்லன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார் பூஜாகுமார்.
இதனிடையே, கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாக உள்ள ‘தலைவன் இருக்கிறான்’ என்ற படத்தில் பூஜா குமார் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது.
ஆனால் இந்த செய்தி உண்மையா என்று பூஜா குமாரிடம் கேட்டபோது என்னிடம் இன்னும் இப்படத்தை பற்றி யாரும் அணுகவில்லை என்று பூஜா குமார் கூறியிருந்தார்.
இந்நிலையில், தலைவன் இருக்கிறான் படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா குமாரை விட ஆண்ட்ரியா பொருத்தமாக இருப்பார் என்று கமலஹாசன் கூறிவிட்டாராம்.
Also See | தலைநகரம்-2 பாகத்தில் வடிவேலு உறுதிப்படுத்திய – சுந்தர். சி
இதன்மூலம் தொடர்ந்து கமல்ஹாசன் படங்களில் நடித்து வந்த பூஜா குமாருக்கு கமலஹாசன் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.