பட்டாசு படத்தின் வெற்றிக்குப் பிறகு தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தனுஷ் மீண்டும் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். இவர் அருண் விஜய்யை வைத்து மாஃபியா என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படப்பிடிப்பு ஜூலையில் துவங்கும் என்று தெரிகிறது. தற்போது இந்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்கள்.