ஒரு மனிதனின் உடலில் ஏற்படும் எந்தவித நோய்களுக்கும் முதலில் குணமளிக்கும் மருந்தாக இருப்பது யோகா என்று பல்வேறு வல்லுனர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த கருத்தை ஒரு சில நாட்களுக்கு முன்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் யோகா தினத்தன்று தெரிவித்திருந்தார்.
அவர் என்ன கூறினார் என்றால் நம் உடலில் ஏற்படும் நோய்களுக்கு யோகா மூலமே தீர்வு கிடைக்கும் என்று ஆணித்தரமாக நான் சொல்கிறேன் என்று பிரதம மந்திரி தெரிவித்திருந்தார்.
மேலும் தற்போது உள்ள இளைஞர்களில் 50% நபர்கள் யோகா மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்கு திரையுலகைச் சேர்ந்த நடிகைகளும் ஒரு சான்றாக இருப்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் அனுஷ்கா, சமந்தா ஆண்ட்ரியா, இனியா, கோமாளி படத்தின் கதாநாயகி சம்யுக்தா ஹெக்டே போன்ற பல நடிகைகள் யோகா மீது அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பிரபலங்களுக்கு யோகா மீது இருக்கும் ஆர்வம் அவர்களை ரசிக்கும் ரசிகர்களுக்கும் வருவதில் எந்தவித ஐயமும் இல்லை.