Today Tamil Cinema News 28-03-2020

கொரோனா பாதிப்பிற்கு மிகப் பெரிய தொகை கொடுத்து பாலிவுட் நடிகர்!

உலகை பெரிதும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசுக்கு இதுவரை உலகம் முழுவதும்  8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 28 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில், இந்தியாவை கொரோனா மிகப்பெரிய அளவில் தற்போது பாதித்து வருகிறது. இதனிடையே, பாரத பிரதமர் இந்தியா முழுவதும் 21 நாட்கள் வீட்டில் மக்கள் தங்கியிருக்க உத்தரவிட்டிருந்தார். மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த அரசுக்கு உதவ முன்வருமாறு பிரதமர் கேட்டுக் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சுமார் 25 கோடி ரூபாய் தொகையை கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமருக்கு நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக தொகையை அளித்த முதல் நடிகர் என்ற பெருமையை தற்போது தக்க வைத்துள்ளார் அக்ஷய் குமார்.

 

 

21 நாட்கள் எப்படி கழிப்பது அறிவுரை கூறும் நடிகை!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோயை எதிர்கொள்ள தற்போது இந்தியாவும் தயாராகி வருகிறது. இந்நிலையில், கொரோனா கட்டுப்படுத்த இந்தியா தற்போது 21 நாட்கள் மக்களை வீட்டிலேயே இருக்கச் சொல்லி அறிவுறுத்தி உள்ளார்கள்.

தற்போது வீட்டிலுள்ள மக்கள் என்னை போல தினமும் உடற்பயிற்சி செய்து உடலை பிட்டாக வைத்து 21 நாட்களை கழிக்கலாம் என்று அறிவுரை கூறியுள்ளார் நடிகை வேதிகா. தற்போது அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

தென்னிந்திய சினிமாவில் சூப்பர்ஸ்டார் கதாநாயகி என்று அழைக்கப்படும் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மகாநதி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது மட்டுமின்றி கீர்த்தி சுரேஷுக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

தற்போது, ரஜினி மற்றும் மோகன்லாலுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Mahesh Babu-Keerthy Suresh
Mahesh Babu-Keerthy Suresh
Exit mobile version