கொரோனா நோயில் இருந்து எவ்வாறு தப்பிக்கலாம் : அமலா பால்!
மைனா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் அமலா பால். அதன்பின்பு வெளியான படங்கள் அனைத்துமே அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தது.
குறிப்பாக தளபதி விஜயுடன் தலைவா, ஆர்யாவுக்கு ஜோடியாக வேட்டை, தனுஷ்க்கு ஜோடியாக வேலையில்லா பட்டதாரி போன்ற வெற்றிப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
தற்போது நாடு முழுவதும் கொரோனா என்ற நோயின் பிடியில் சிக்கி இருப்பதால் மக்கள் அனைவரும் தங்களை தற்காத்துக்கொள்ள அவர்கள் அவர்கள் அவர்களின் இல்லத்திலேயே தங்கி இருக்கிறார்கள்.
இதனிடையே, நடிகை அமலா பால் கொரோனா நோயின் பிடியிலிருந்து தப்பிக்க என்னைப் போல நீங்களும் உங்கள் வீட்டின் மேல் உள்ள கூரையில் அமர்ந்து கொள்ளுங்கள் உங்களை நீங்கள் காத்துக் கொள்ளலாம் என்று ஒரு யோசனையை கூறியிருக்கிறார்.
அட்லி தயாரிப்பில் ஜெயம் ரவி!
ராஜா ராணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அப்படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய்யை வைத்து தெறி என்ற படத்தை இயக்கினார்.
இத்திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது அதை தொடர்ந்து தளபதி விஜயுடன் மீண்டும் மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து விஜய் படங்களை இயக்கி வருகிறார் அட்லி.
இந்நிலையில், அட்லி தனது தயாரிப்பில் ஒரு புதிய படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இத்திரைப்படத்தை அட்லியின் உதவியாளர் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படத்தின் கதாநாயகனாக ஜெயம் ரவி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தைப் பற்றி ஜெயம் ரவியிடம் அட்லீ பேசியதாகவும் ஜெயம் ரவி நாம் இணைந்து படம் பண்ணலாம் என்று கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.