திரையரங்க உரிமையாளர்களுக்கு சூர்யா துரோகம் செய்கிறார் – திருப்பூர் சுப்பிரமணி

Suriya film Soorarai Pottru to release on Amazon Prime Video
Suriya film Soorarai Pottru to release on Amazon Prime Video

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

ஏற்கனவே படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதமே திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா என்ற நோயின் தாக்கத்தால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு திரையரங்கு மூடப்பட்டது. இதனால் இப்படம் வெளியாகவில்லை சுமார் 150 நாட்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடி இருப்பதால் மேலும் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், தான் சூர்யா ‘சூரரைப் போற்று’ படத்தை அமேசான் பிரைமில் அக்டோபர் மாதம் 30- ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார். சூர்யாவின் இந்த முடிவை திரையரங்க உரிமையாளர் ஆன திருப்பூர் சுப்பிரமணியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சூர்யாவின் இந்த முடிவு திரையரங்குகளில் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் மேலும் சூர்யா திரையரங்க உரிமையாளர்களையும் வாழ்வை அளிக்கவே இத்திரைப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிடுகிறார் என்றும் கூறியுள்ளார்.

Suriya film Soorarai Pottru to release on Amazon Prime Video
Suriya film Soorarai Pottru to release on Amazon Prime Video
Exit mobile version