பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்திற்கும் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இந்த செய்தி பாலிவுட் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் நலமுடன் வீடு திரும்ப கடவுளைப் பிரார்த்தித்து வருகிறார்கள்.
இந்நிலையில், அமிதாப் பச்சன் வீடு சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அவரது இல்லத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது மும்பை மாநகராட்சி.
இன்று காலை கொட்டும் மழை பற்றி எந்த கவலையும் இல்லாமல் அவர் வீட்டைச்சுற்றி கிருமி நாசினி தெளித்து அமிதாபச்சன் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநகராட்சி செய்து வருவதாக புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் மும்பை மாநகராட்சி.