தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் ஏற்று நடிக்கும் நடிகர் விஜயகுமார். இவரது மகன் அருண் விஜய் சேரன் இயக்கத்தில் உருவான பாண்டவர் பூமி என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்பு ஒரு சில படங்களில் நடித்தாலும் அருண் விஜய்க்கு ஒரு பெரிய வெற்றி திரைப்படம் அமையவில்லை.
இதனிடையே, தான் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் குமார் போலீஸ் அதிகாரியாக நடித்த திரைப்படம் என்னை அறிந்தால். அப்படத்தில் வில்லனாக அருண்விஜய் நடித்திருந்தார். என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்யின் நடிப்பை பார்த்து திரையுலகினர் மற்றும் அஜித் ரசிகர்கள் வெகுவாக பாராட்டினார்கள். அதன்பின்பு அருண் விஜய்க்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் தடையறத் தாக்க, குற்றம் 23, தடம், செக்கச் சிவந்த வானம், மாபியா என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார்.இதனிடையே, அறிமுக இயக்குனர் விவேக் இயக்கத்தில் அருண் விஜய் முதல்முறையாக பாக்ஸராக நடிக்கும் திரைப்படம் பாக்ஸர். படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக வெற்றி விகாஸ் சிங் நடிக்கிறார். படத்திற்கு இசை இமான்.
ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது படம் எந்த நிலைமையில் உள்ளது படம் முழுமையாக எடுக்கப்பட்ட விட்டதா என்பது பற்றி எந்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
இதனிடையே அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பாக்சர் படத்தைப்பற்றி ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியதாவது நாங்கள் எங்களால் முயன்ற பல முயற்சிகளை இப்படத்திற்காக எடுத்து வருகிறோம். எங்களது உடல் உழைப்பு மட்டுமின்றி மனதளவிலும் நாங்கள் படத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.
ஆனால் படத்திற்கு இன்னும் நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டியுள்ளது சுமார் 50 சதவீத படப்பிடிப்புகளை இதுவரை நடைபெற்றுள்ளது. மீதமுள்ள படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து விரைவில் உங்களை சந்தோஷப்படுத்த பாக்சர் படத்துடன் நாங்கள் வருவோம் என்று கூறியுள்ளார். கடைசியாக அருண் விஜய் நடிப்பில் வெளியான மாபியா வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.