Vadivelu committed in thalainagaram-2
சுந்தர்.சி முதல்முறையாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் தலைநகரம். படத்தில் சுந்தர்.சி பிரபல ரவுடியாக நடித்திருப்பார்.
இப்படத்தில் நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருப்பார். படம் முழுக்க வடிவேலுவும் சுந்தர்.சியும் இணைந்து செய்யும் லூட்டி தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்களை ஆழ்ந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.
இந்நிலையில், சுந்தர்.சி தலைநகரம் இரண்டாம் பாகத்திற்கான கதைகளை எழுதி முடித்து விட்டதாகவும். படத்தை வி.இசட்.துரை இயக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் மீண்டும் வடிவேலுவே நடிப்பார் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.