பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி திகழ்ந்தவர் கரினா கபூர். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின்பு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இவருக்கு அழகான ஒரு ஆண் குழந்தையும் உண்டு.
இந்நிலையில், மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வகையில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான Good Newwz திரைப்படம் கரீனா கபூருக்கு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது.
இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க முடிவு எடுத்த கரீனா கபூர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதால் கரீனா கபூர் இந்த இடைவெளியில் பிலிம் பேர் இதழ் ஒன்றுக்கு ஒரு கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த பாலிவுட் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்க மீண்டும் தயாராகி விட்டீர்களா என்று கரீனா கபூரை கேள்வி கேட்டு வருகிறார்கள்.