மீண்டும் கே.வி. ஆனந்த் உடன் இணையும் சூர்யா!
பொதுவாக சினிமா துறையில் ஒரு படம் வெற்றி பெற்றால் அப்படத்தில் பணியாற்றிய நடிகர் மற்றும் இயக்குனர் மீண்டும் இணைவது வழக்கமான ஒன்று.
அந்த வகையில் சூர்யா, கே. வி. ஆனந்த் கூட்டணியில் உருவான அயன், மாற்றான், காப்பான் போன்ற படங்கள் எல்லாமே வசூலில் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள்.
இந்நிலையில், சூர்யா தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை படப்பிடிப்பு முடிந்த பின்பு சூர்யா கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓடிடியில் வெளியாகும் அனுஷ்கா படம்!
ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன், அஞ்சலி என பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படம் நிசப்தம்.
இத்திரைப்படத்தில் அனுஷ்கா கண்பார்வையற்ற பெண்மணியாக நடித்திருக்கிறார். படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவு பெற்று ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இதனிடையே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது மட்டுமின்றி திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதனால் கடந்த இரண்டு மாதங்களாக எந்த புதிய திரைப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில், நடிகை அனுஷ்காவின் நிசப்தம் திரைப்படம் அமேசான் பிரைம் விரைவில் வெளியாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.