எதிர்பார்ப்பை எகிற வைத்த ஒரு குட்டி கதை பாடல்
பொதுவாக தளபதி விஜய் படத்தின் பாடல்கள் எப்போதுமே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். குறிப்பாக தளபதிவிஜய் பாடினால் அந்தப் பாடலுக்கு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். அப்படி தான் மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி கதை பாடல் தற்போது ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அனிருத் இசையில் தளபதி விஜய் கத்தி படத்தில் பாடிய செல்பிபுள்ள பாடல் அந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக நபர்கள் கேட்ட பாடலாக மற்றும் பார்த்த பாடலாக இருந்தது அதன் பிறகு தளபதி விஜய் மற்றும் அனிருத் கூட்டணியில் மாஸ்டர் படத்தில் உருவாகியுள்ள இந்தப் ஒரு குட்டி கதை பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
இந்தப் பாடல் எந்த விதத்தில் இருக்கும் என்று இப்போதே தளபதி விஜய் ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
அணிருத் ஏற்கனவே இசையமைத்த பாடல்கள் எல்லாமே இளசுகளின் மனதை கொள்ளை அடித்து செல்வதால் மாஸ்டர் படத்தில் இந்த ஒரு குட்டிக்கதை பாடலும் நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பிடித்த பாடலாக அமைய அதிக வாய்ப்பு உள்ளதாக வல்லுனர்கள் கூறிவருகிறார்கள்.
Nanba, get your ? and ? ready! #KuttiStory #KuttiKathai is reaching you tomorrow at 5pm ! ?#Master #MasterSingle #KuttiStory #1daytogoforKuttiKathai
Thalapathy @actorvijay sir special! @Dir_Lokesh @MalavikaM_ @Jagadishbliss @Lalit_SevenScr @SonyMusicSouth pic.twitter.com/j4vVRIPa6g
— Anirudh Ravichander (@anirudhofficial) February 13, 2020
ஒருவழியாக வெளியீட்டிற்கு தயாராகும் திரிஷா படம்!
கடந்த 20 வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரே நடிகை என்றால் அது திரிஷா என்றே சொல்லலாம். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே வசூல் ரீதியில் மட்டுமின்றி ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடம் பிடித்த படங்களாக அமைந்தது.
இந்நிலையில், த்ரிஷா நடிப்பில் படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாக வெளியீட்டிற்கு தள்ளிப் போய்க்கொண்டிருந்த பரமபதம் விளையாட்டு என்ற படம் தற்போது ஒருவழியாக வெளியாக உள்ளது.
படத்தில் படத்தில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கே.திருக்ணனம் இப்படத்தை இயக்குகிறார். படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கிறார். இதனிடையே பரமபதம் படம் வருகின்ற பிப்ரவரி 28-ஆம் தேதி உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியாகிறது.
அதிக திரையரங்குகளில் வெளியாகும் நான் சிரித்தால்!
இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ராணா இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் படம் நான் சிரித்தால். படத்தில் ஆதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனாக இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் நடிக்கிறார்.
இந்நிலையில், படம் வருகின்ற பிப்ரவரி 14 வெளியாகவுள்ள நிலையில் படம் உலகம் முழுவதும் சுமார் 759 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி எந்தெந்த ஏரியாக்களில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது என்பது உட்பட அனைத்தையும் இந்த போஸ்டரில் தெரிகிறது.
ஆதி நடிப்பில் உருவாகியுள்ள படங்களிலேயே அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் என்ற பெருமையும் நான் சிரித்தால் படம் பெறுகிறது.