ஆட்டோகிராப் வாங்க தகுதியான நபர்கள் இவர்கள்தான் : சூரி!
உலகை பெரிதும் அச்சுறுத்திவரும் கொடிய நோயான கொரோனாவிற்கு தற்போது இந்தியாவும் பலியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது.
இதை தடுக்க மருத்துவர்கள், காவல்துறையினர், மற்றும் துப்புரவு பணியாளர்கள் நேரடியாக களத்தில் இறங்கி போராடி வருகிறார்கள்.
இவர்களின் அயராத பணியை பாராட்டும் வகையில் நகைச்சுவை நடிகர் சூரி இன்று நேரில் சென்று அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கினார். தற்போது தான் வாங்கிய ஆட்டோகிராப் பற்றி ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார் சூரி. சூரியன் இந்த செயலை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.
நிஜ ஹீரோக்களின் ஆட்டோகிராஃப் ??#AutographwithRealHeros
@chennaicorp @chennaipolice_ @IMAIndiaOrg @IASassociation #COVID19 pic.twitter.com/NvbjIoAZLv
— Actor Soori (@sooriofficial) May 12, 2020
அண்ணாத்த வெளியீட்டு தேதியை மாற்றிய சன் பிக்சர்ஸ்!
தர்பார் படத்தின் வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் படம் அண்ணாத்த. படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு மற்றும் மீனா நடிக்கிறார்கள். படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.
அண்ணாத்த படத்தை மிக பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதிமாறன் தயாரிக்கிறார். இதனிடையே படம் எப்போது வெளியாகும் என்று தற்போது சன் பிக்சர்ஸ் வீடியோ உடன் வெளியிட்டுள்ளார்கள்.
#AnnaatthePongal2021#அண்ணாத்தபொங்கல்2021@rajinikanth @directorsiva @immancomposer @KeerthyOfficial @prakashraaj @khushsundar @sooriofficial @actorsathish pic.twitter.com/PY5qldztmC
— Sun Pictures (@sunpictures) May 12, 2020
11 பெண்களை காப்பாற்றிய தளபதி விஜய்!
சென்னையை சேர்ந்த தேவிகா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 11 பெண்கள் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு திருமணத்திற்காக சென்றிருந்தனர். இந்த நிலையில் திடீரென காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டால் அவர்கள் 11 பேரும் தூத்துக்குடியில் மாட்டிக்கொண்டனர். தேவிகா தவிர அவரது குடும்பத்தில் இருந்த மற்ற பெண்கள் அனைவரும் 20 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் தூத்துக்குடியில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியை சந்தித்து தங்களுடைய நிலையை கூறினார்கள். உடனடியாக அவர் அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் பிஸி ஆனந்த் அவர்களுக்கு தகவல் கொடுத்தார். இந்த விஷயம் உடனடியாக விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தளபதி விஜய் உடனடியாக தூத்துகுடி மற்றும் திருநெல்வேலியில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு போன் செய்து அந்த 11 பெண்களும் பத்திரமாக சென்னைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து அந்த 11 பெண்கக்குளும் முறையாக அரசிடம் அனுமதி பெறப்பட்டு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இதனை அடுத்து சென்னையில் அந்த 11 பெண்களும் அவரவர் வீட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரே ஒரு போன் காலில் 40 நாட்களாக தூத்துகுடியில் தவித்த 11 பெண்களை தளபதி விஜய் காப்பாற்றியுள்ள செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.