மோகன்தாஸ் இது விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில்!
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி ராட்சசன் படத்தின் மூலமாக ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் விஷ்ணு விஷால் தற்போது முரளி கார்த்திக் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்துக்கு மோகன்தாஸ் என்று பெயர் வைத்துள்ளார்கள். படத்திற்கு இசை சுந்தரமூர்த்தி. எடிட்டிங் கிருபாகரன் என பெரும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இப்படம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோ தயாரிக்கிறது.
இணையத்தை கலக்கும் நாகினி நடிகையின் பிகினி போட்டோஸ்!
சினிமாவை விட சீரியல்களில் மக்களின் கவனம் தற்போது அதிகமாக இருக்கிறது. குறிப்பாக திகில் கலந்த சீரியல்கள் இந்தியா முழுவதும் அதிகம் பேர் பார்க்கும் சீரியலாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக நாகினி சீரியல் வட இந்தியாவிலிருந்து தற்போது தென்னிந்திய ஆக்கிரமித்து உள்ளது என்றால் அது மிகையாகாது.
அந்த சீரியலில் நாகினி ஆக நடிக்கும் நடிகையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைபடத்தில் நடிகை நேகா சர்மா பிகினி உடையில் காட்சி அளிக்கிறார்.
தற்போது இந்த புகைப்படத்தை இணையத்தில் ரசிகர்கள் கண்டு மகிழ்ந்து வருகிறார்கள்.
கொரோனா அட்லி நிதி உதவி!
ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதன் பின்பு தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், உலகமே கொரோனா என்ற நோயின் பிடியில் தவித்து வரும் நிலையில் அட்லி சுமார் 10 லட்சம் நிதி உதவி அளித்து உள்ளார். அந்த பத்து லட்சத்தில் 5 லட்சம் இயக்குனர் சங்கத்திற்கும். 5 லட்சம் பெப்சி தொழிலாளர்களுக்கும் வழங்கியுள்ளார் அட்லி.
தென்னிந்திய நடிகர் சங்க நடிகர்களுக்கு உதவி செய்த யோகிபாபு
தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு யோகி பாபு காமெடி மிகவும் முக்கியமானது. சிறு பட்ஜெட் படங்களில் இருந்து பெரிய பட்ஜெட் படங்கள் வரை யோகி பாபு அனைத்து படங்களுமே தற்போது நடித்து வருகிறார்.
இதனிடையே உலகமே தற்போது கொரோனா என்ற நோயின் பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க துணை நடிகர்களும் தற்போது மிகுந்த பாதிப்பில் இருக்கிறார்கள். எந்தவித படப்பிடிப்பும் நடைபெறாத காரணத்தால் அவர்களுக்கு வருமானம் இன்றி இருக்கிறார்கள்.
இந்நிலையில், இவர்களின் ஒரு சிலர் குறையை தீர்க்க யோகிபாபு நேற்று சுமார் 1250 கிலோ மதிப்புள்ள அரிசி மூட்டைகளை தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் வழங்கினார். தற்போது இவரின் இந்த செயலை திரையுலகில் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்.