மிக பிரமாண்டமாக தயாராகிறது சந்திரமுகி-2!
2005-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரபு தயாரிப்பில் மிக பிரமாண்டமாக வெளியான படம் சந்திரமுகி.
கன்னட படத்தின் ரீமேக் என்றாலும் படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சந்திரமுகி படத்திற்கு முன்பு ரஜினி நடித்த பாபா திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில் ரஜினி நிச்சயம் ஒரு ஒரு வெற்றி கொடுக்க வேண்டும் என்று மிகுந்த பொறுப்புடன் நடித்து வெளியான படம் சந்திரமுகி.
படம் வெளியாகி வசூலில் மாபெரும் சாதனை படைத்தது மட்டுமின்றி சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக படம் ஓடி சாதனை செய்தது.
இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தை தயாரிக்க தற்போது சன் பிக்சர்ஸ் ஒமுடிவு செய்துள்ளது. ஆனால் இந்த முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவில்லை அவருடைய பரம ரசிகன் அதாவது தற்போது பேய் படங்களில் நடித்து வெற்றி நடிகராக திகழ்ந்து வரும் ராகவா லாரன்ஸ் ரஜினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், சந்திரமுகி-2 படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த படத்தையும் பி.வாசு தான் இயக்கி இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
தற்போது. இந்த படத்திற்காக லாரன்ஸ் அட்வான்ஸ் வாங்கிய தொகையை தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கியதாக ராகவா லாரன்ஸ் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஏக்கத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு போஸ்டர் மூலம் விருந்து கொடுத்த மாஸ்டர் படக்குழு!
உலகம் தற்போது கொரோனா என்ற நோயின் மூலம் பெரும் பாதிப்பில் உள்ளது. தற்போது இந்த பாதிப்பு இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது. இதுவரை இந்தியாவில் சுமார் 6 ஆயிரம் நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 220 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இதன் தாக்கத்தை கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தக் கொடிய நோயை ஒழிக்க சுமார் மூன்று மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது.
ஆகையால் அதுவரை அத்தியாவசிய பொருள்களை தவிர வேறு எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட குறிப்பாக திரையரங்குகள் மற்றும் பெரிய மால்கள் திறக்க வேண்டாம் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் கூறி வருகிறது.
இதனால் தற்போது சினிமா தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் சரியாக இன்று வெளியாக இருக்க வேண்டும்.
ஆனால், கொரோனா நோயால் படம் இன்று வெளியாகவில்லை எப்பொழுது வெளியாகும் என்றும் சரியாக கூற முடியாது.
இந்த பிரச்சனை மாஸ்டர் படத்துக்கு மட்டுமல்ல சூர்யாவின் சூரரைப்போற்று மற்றும் தனுஷின் ஜகமே தந்திரம் படங்கள் என வரிசையாக படங்கள் எப்போது வெளியாகும் என்று தெரியாத நிலையில் தற்போது திரையுலகம் ஒரு பெரும் சோகத்தில் உள்ளது.
இந்நிலையில், மாஸ்டர் படத்தைப் பற்றிய ஏதேனும் அப்டேட் கிடைத்துவிடாதா என்று விஜய் ரசிகர்கள் பெரும் ஏக்கத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில், தளபதி ரசிகர்களை ஆறுதல் படுத்தும் விதத்தில் மாஸ்டர் படக்குழு தற்போது ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் தளபதி விஜய் கைகள் இரண்டையும் இணைத்து கொண்டு மௌனமாக இருப்பது போல் இந்த போஸ்டர் இருக்கிறது.
அது மட்டுமின்றி இந்த போஸ்டரில் சில வரிகளையும் படக்குழு எழுதியுள்ளார்கள் அது என்னவென்றால் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த ஊரடங்கு உத்தரவு விலகிய உடன் மாஸ்டர் நிச்சயம் உங்களை சந்திப்பார் என்று எழுதியுள்ளார்கள். இந்த போஸ்டர் சற்று விஜய் ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.
நடிப்புக்கு ஓய்வு கொடுத்தார் விக்ரம்?
தமிழ்சினிமாவில் நடிப்பிற்கு தனி இலக்கணம் வகுத்தவர் சியான் விக்ரம். சினிமாவில் மற்ற நடிகர்களுக்கு தனது குரல் மூலம் உயிர் கொடுத்து வந்த விக்ரம் இயக்குனர் பாலா இயக்கத்தில் சேது என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப்படத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட நபராக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார் விக்ரம்.
அதன் பின்பு வெளியான காசி என்ற படத்தில் கண்பார்வையற்ற நபராக நடித்து கமலஹாசனுக்கு இணையாக நடிக்கும் ஒரே நடிகர் என்ற பெயரையும் பெற்றார் விக்ரம். அதன் பிறகு தொடர்ந்து தில், ஜெமினி, சாமி, தூள், கந்தசாமி என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் விக்ரம் நடித்த ஒரு சில படங்கள் சரியாக போகவில்லை. அதுமட்டுமின்றி விக்ரமின் மகன் தற்போது நடிக்க வந்திருப்பதால் விக்ரம் நிச்சயம் நடிப்பிலிருந்து விலகி விடுவார் என்று சினிமா வட்டாரங்களில் பேசி வந்தார்கள்.
தற்போது இந்த பேச்சுக்கு விக்ரம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் Cobra என்ற படத்தில் நடித்து வரும் விக்ரம் அதன்பின்பு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தை அடுத்து மாஸ்டர் படத்தை தயாரித்து வரும் Seven Screen Studio நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இதன் மூலம் நடிப்பிற்கு விக்ரம் ஓய்வு கொடுத்து விட்டார் என்ற பேச்சுக்கு விக்ரம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்று கூறலாம். விக்ரமின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.