தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ்!
தனுஷ் நடிக்க வந்து இன்றுடன் 18 வருடங்கள் நிறைவு பெறுகிறது. தனுஷின் இந்த வெற்றிப் பாதையை திரையுலகைச் சேர்ந்த நடிகை நடிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முரளி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ் அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். மேலும் தளபதி விஜயின் படத்தை முடித்த பிறகு நிச்சயமாக உங்களுடன் நாங்கள் இணைய இருக்கிறோம் என்றும் அந்த டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் நடிகர் தனுஷ் மீண்டும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பில் நடிக்க இருப்பது தெளிவாக தெரிகிறது.
ஆறு நிமிட சண்டை காட்சிக்கு இத்தனை கோடி செலவா – புஷ்பா!
ஆலா வைகுந்தபுரரமுலூ படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. படத்தில் அல்லு அர்ஜுன் லோக்கல் தாதாவாக நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்றுக்கு படக்குழு ஆறு கோடி ரூபாய் செலவு செய்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சண்டைக்காட்சி படத்தில் 6 நிமிடம் மட்டுமே வருமாம்.
இந்த சண்டைக் காட்சியை பற்றி படத்தின் இயக்குனரிடம் கேட்டபோது கதைக்கு தேவை என்பதால் இத்தனை கோடி செலவு செய்து இந்த சண்டைக் காட்சியை படமாக்கி உள்ளோம். மேலும் இந்த சண்டைக்காட்சி படத்தின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று இயக்குனர் கூறியுள்ளார்.
ஆறு நிமிடம் நடைபெறும் சண்டைக் காட்சிக்கு எதற்கு இத்தனை கோடி என்று தெலுங்கு திரையுலகமே பிரமிப்பில் இருக்கிறார்களாம்.
பூனம் பஜ்வா லேட்டஸ்ட் போட்டோஸ்!
ஹிந்தியில் வெளியாக இருக்கும் காஞ்சனா!
லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து காஞ்சனா படத்தை ஹிந்தியில் தயாரிக்க ஷபினா கான் முடிவு செய்தார். மேலும் படத்தை இயக்க லாரன்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ராகவா லாரன்ஸும் படத்தை இயக்க ஒப்புதல் அளித்து தற்போது படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இப்படத்தில் லாரன்ஸ் கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடித்திருக்கிறார். படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட உடன் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விரைவில் படம் வெளியாகும் என்று தெரிகிறது.