கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம்!
விஜய் சேதுபதி நடிப்பில் உருவான பீட்சா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ஜிகர்தண்டா,மெர்குரி,இறைவி,பேட்ட என வெற்றிப் படங்களை இயக்கி வருகிறார். தற்போது தனுஷை வைத்து ஜகமே தந்திரம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வரும் கார்த்திக் சுப்புராஜ் தற்போது சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக ரவிக்குமார் தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேற்கொண்ட நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
தற்போது படக்குழு ஒரு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்கள்.
அந்த போஸ்டரில் துப்பாக்கியை ஒருவர் கையிலிருந்து இன்னொரு வாங்குவது போன்று அந்த போஸ்டர் அமைந்துள்ளது. மேலும் போஸ்டரை பார்த்த விக்ரம் ரசிகர்கள் இணையதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ரோஜா!
மாறுபட்ட கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வரும் விஜய் சேதுபதி தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக ‘புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ‘புஷ்பா’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரோஜா நடிக்கவிருப்பதாகவும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்றும் தகவல் வருகிறது.
24 படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது!
சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில், சூர்யா நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான 24 என்ற படத்தில் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தற்போது தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் சூர்யா அண்ணன், தம்பி மற்றும் மகன் என மூன்று வேடங்களில் நடித்திருப்பார்.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல் கசிந்துள்ளது. ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தை அடைவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.