பிகில் வெற்றிக்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். 50 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில். படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், மாஸ்டர் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தை தமிழகத்தில் வெளியிட பல விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வந்த நிலையில் மீண்டும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமாருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவுக்கு தமிழகத்தில் வெளியிட இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது தளபதி விஜய் தானம். காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது.
பிகில் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 77 கோடிக்கு வாங்கிய லலித்குமார் படத்தை தமிழகமெங்கும் சுமார் 87 கோடிக்கு விற்றார். அதாவது சுமார் 10 கோடி லாபத்திற்கு மட்டுமே படத்தை தமிழகமெங்கும் வெளியிட்டார்.
இதனிடையே, பிகில் தமிழகமெங்கும் சுமார் 140 கோடிக்கு மேல் வசூல் செய்து. சுமார் 80 கோடிக்கு வரை வினியோகஸ்தர்களுக்கு ஷேர் கிடைத்தது. இதனால் பிகில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அனைவரும் மிகுந்த லாபம் கிடைத்தது. இந்த விஷயங்களை கேள்விப்பட்ட தளபதி விஜய் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததோடு தன்னுடைய அடுத்த படத்தை நீங்கள் தான் வெளியிட வேண்டும் என்று சொல்லிவிட்டாராம்.