லொள்ளுசபா மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் சந்தானம். அந்த நிகழ்ச்சி வெற்றியின் தொடர்ச்சியை தொடர்ந்து சிலம்பரசன் இயக்கி தயாரித்த வல்லவன் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் தனது பயணத்தை துவங்கினார்.
இந்தப் படத்தில் சந்தானத்தின் நகைச்சுவை அனைத்து ரசிகர்களிடையே சென்று சேர்ந்தது இதன் தொடர்ச்சியாக சந்தானம் ஒரு படத்தில் நடித்தாலே போதும் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுவிடும் என்று சொல்லும் அளவிற்கு சந்தானத்தின் வளர்ச்சி இருந்தது.
இதனால் பல படங்களில் சந்தானம் ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரம் வழங்கப்பட்டது. இதனால் என்னவோ சந்தானம் ஏன் நாம் கதாநாயகனாக நடிக்க கூடாது என்ற எண்ணம் தோன்றி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு என பல படங்களில் சந்தானம் கதாநாயகனாக நடித்தார்.
இதில் தில்லுக்கு துட்டு அவர் நடித்த படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக அமைந்தது.
இந்நிலையில், சந்தானத்தை காமெடி கதாபாத்திரத்தில் பல படங்களில் நடிக்க வைத்த இயக்குனர் R. கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ‘பிஸ்கோத்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே பிஸ்கோத் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட இருப்பதாக படத்தின் இயக்குனர் R. கண்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவைப் பார்த்த சந்தானம் ரசிகர்கள் நாங்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறோம். ‘பிஸ்கோத்’ படத்தின் டிரைலருக்கு என்று டுவிட்டரில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.