நாடு முழுவதும் கொரோனா என்ற நோய் தாக்கத்தால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் பல துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திரைத்துறையினர் இந்த நோயின் பாதிப்பால் பல படங்கள் வெளியாகாமல் உள்ளது.
மேலும் திரையரங்குகள் மூடி சுமார் 100 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதே நிலை நீடித்தால் திரையரங்குகள் திறக்க முடியாத நிலைக்கு சென்றுவிடும். ஆனால் இந்த நிலையை தவிர்க்க பி.வி.ஆர் திரையரங்கம் ஒரு புது முயற்சி எடுத்துள்ளது.
அதாவது தங்கள் திரையரங்களில் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதுடன் திரையரங்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அவர்களின் பாதுகாப்பு அமைந்துள்ளது.
குறிப்பாக திரை அரங்கிற்கு உள்ளே வருபவர்க்கு டெம்பரேச்சர் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் வரும் நபர்களுக்கு முக கவசம் அளிக்கப்படுகிறது. கைகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ரசிகர்கள் உள்ளே வரும்படி பி.வி.ஆர் பல ஐடியாக்களை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
மேலும் தங்கள் திரையரங்கில் எவ்வாறு பாதுகாப்பு அளிக்கப்படும் என்பதை வீடியோ மூலமாக பி.வி.ஆர் தெரிவித்துள்ளார்கள். தற்போது அந்த வீடியோ அவர்களின் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.