ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.
அதன்பின்பு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் மற்றும் ரெமோ. விஜய்க்கு ஜோடியாக பைரவா மற்றும் சர்க்கார். விக்ரமுக்கு ஜோடியாக சாமி-2 என தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக நடித்துள்ளார். கடைசியாக தளபதி விஜய்க்கு ஜோடியாக சர்க்கார் படத்தில் நடித்தார்.
இதனிடையே கடந்த 2 வருடமாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் எந்த படமும் வெளியாகாத நிலையில். தற்போது இவர் நடிப்பில் பென்குயின் என்ற திரைப்படம் வருகின்ற 19-ஆம் தேதி OTT வெளியாகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு வருடமாக படம் நடிக்காதது ஏன் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு இந்த இரண்டு வருடமாக என்னை நான் பக்குவப்படுத்திக் கொள்ள சரியான நேரமாக பயன்படுத்திக் கொண்டேன் என்று கீர்த்தி சுரேஷ் பதிலளித்துள்ளார். மேலும் தனது சம்பளத்தை 30 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.