இந்தியா, சீனா எல்லையில் நடந்த மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி என்ற 42 வயது ராணுவ வீரர் இன்று உயிரிழந்துள்ளார்.
இவரின் இந்த வீர மரணத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
குறிப்பாக நடிகர் கமலஹாசன், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தமிழக முதல்வர் பழனிசாமி என அனைத்து பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தை தயாரித்து வரும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளர் திரு.ராஜேஷ் கோட்டாபாடி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பழனியின் வீர மரணத்திற்கு நான் தலைவணங்குகிறேன். மேலும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
Our heart goes out to Soldier #Pazhani’s family. He feels one of our own… Our own Ranasingam! No money would equate the death of a warrior. But here’s whatever little we could… We pledge 5 lacs to Pazhani’s family for his mighty sacrifice. May his souls #RIP ??
— KJR Studios (@kjr_studios) June 16, 2020
மேலும் சுமார் 5 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்குகிறேன் என்று அறிவித்துள்ளார். தயாரிப்பாளரின் இந்த அறிவிப்பு அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது.